சின்னக்குளம் ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலய திருவிழாவின் தீமிதிப்பு

0
290

அக்கரைப்பற்று சின்னக்குளம் ஸ்ரீP வீரம்மாகாளியம்மன்; ஆலய வருடாந்த அலங்காரத் திருச்சடங்கு திருவிழாவின் தீமிதிப்பு நேற்று பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

;நேற்று முன் இரவு தீ மூட்டும் கிரியைகள் ஆரம்பமானதுடன் அதிகாலை பக்தர்களுக்கு நோர்ப்பு நூல் கட்டப்பட்டது. இதன் பின்னராக மஞ்சல் குளிக்கும் கிரியைகள் இடம்பெற்றதுடன் அம்மனுக்கான விசேட பூஜைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து தீமிதிப்பு ஆரம்பமான நிலையில் கடந்த வருடங்களை விட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெருந்திரளான பக்தர்கள் தீமிதிப்பில் கலந்து கொண்டதை காண முடிந்தது.

வீரம்மாகாளியம்மன் ஆலய தலைவர் பி.பிராசந்தன் தலைமையில் இடம்பெற்ற திருச்சடங்கு கிரியைகளை உற்சவகால குரு ஆலய பிரதம குரு காளிதாசன் சிவத்திரு க.சிவராசா உற்சாடனபானு சிவத்திரு .யோகானந்தம் அவர்களாலும் உதவிக்குருமார்களான சக்தி பிரியன்; சிவத்திரு சோ.கஜேந்திரன் இளஞ்சுடர் சிவத்திரு யோ.மோகன்ராஜ் காளியின் மைந்தன் சிவத்திரு ஜெ.ஜெயரூபன் சக்திதாசன் ;சிவத்திரு வி.நிசாந் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சடங்கினை நடாத்தி வைத்தனர்.

கணபதி ஹோமம் மற்றும் திருக்கதவு திறத்தலுடன் கடந்த 26ஆம் திகதி ஆரம்பமான திருச்சடங்கானது அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து இடம்பெற்ற பாற்குடபவனியுடனும்; 02ஆம் திகதி இடம்பெறும் அம்மனின் உள்வீதி உலா வருதலுடனும் 03ஆம் திகதி காவடி ஆட்டங்களுடன் இடம்பெறும் வெளிவீதி மற்றும் கிராம சுற்றுலாவுடனும்; 04ஆம் திகதி இடம்பெறும் சக்தி மகா யாகம் நோர்ப்பு நெல் நேர்தல் ஆகிய கிரியைகளுடனும் 05ஆம் திகதி இடம்பெற்ற பக்தி ததும்பும் தீமிதிப்பு 12ஆம் திகதி இடம்பெறும் எட்டாம் சடங்குடனும் நிறைவுறும்.

வருடாந்த அலங்காரத் திருச்சடங்கினையும் ஆலய வழிபாட்டு பிரதான கிரியைகள் யாவற்றையும் ஆலய பிரதமகுரு க.சிவராசா, உற்சவகாலகுரு சிவத்திரு ,.யோகானந்தம் உள்ளிட்ட பிரதம குருமார்களாலும் நடாத்தி வைக்கப்படவுள்ளதுடன் வாத்ம சாந்தி கிராம சாந்தி சக்தி பூஜை ஆகியவற்றை சிவஸ்ரீ சீ.கு.கௌரிசங்கர் குருக்கள் அவர்களால் நடாத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.