இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு பிரதேச செயலக மட்டத்தில் நடாத்தும் வியாபார மற்றும் வங்கி சேவைமுகாம்
இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிக்குட்பட்ட பிரதேச சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்,
பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் இந்த சேவை முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது.
பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சந்திரகலா பிரணவஜோதி ,மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் ,உத்தியோகத்தர்களும் இதில் பங்கேற்றனர்.
வங்கி சேவைமுகாம் திட்டங்கள் மற்றும் வணிக திட்டங்கள் ஒருங்கிணைத்தல் தொடர்பாகவும், 2023 ஆண்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் இளம்தொழில் முயற்சியாளர்கள் மற்றும் தொழில் முனைவோர், தொழில் ஒன்றினை ஆரம்பிப்பதற்கான நிதியினை பெற்றுக்கொள்ளல் தொடர்பிலும் சேவைகள்
வழங்கப்பட்டன.