சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு பேரணி!

0
184

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு நடைபவனியும், விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் யாழ்ப்பாணம் – சங்கானையில் இன்று இடம்பெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு பேரணி, சங்கானை கலாச்சார மண்டபத்தில் இருந்து ஆரம்பமாகி, வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் நிறைவுற்று பிரதேச செயலகம் முன்பாக பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

சங்கானை பிரதேச செயலர் பிரேமினி பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத், வேர்ள்ட் விசன் தொண்டு நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், கல்வி திணைக்கள அதிகாரிகள், சங்கானை பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி, பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.