மஹியங்கனை பெரஹராவில் பங்கேற்க வந்த ‘சீதா’ எனும் யானை மீது இன்று அதிகாலை 03.30 மணியளவில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
காட்டு யானை என நினைத்து வனவிலங்கு அதிகாரி சீதாவை சுட்டதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.