சீனாவுடன் அரசாங்கம் செய்துள்ள 450 ஏக்கர் முதலீட்டு உடன்படிக்கை என்ன என்பதையும், இந்த தொழில்சாலையின் உற்பத்தி தேசிய சந்தையை இலக்கு வைக்குமா? என்பதையும் அரசாங்கம் சபைக்கு அறிவிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 32 நிறுவனங்களின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இடம்பெறும் நிலையில் அமைச்சுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய அமைச்சர் சபையில் இல்லாதமையானது பாராளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.