சுகாதாரத் துறையில் நிலவும் வெற்றிடங்களை இம்மாத நடுப்பகுதி முதல் நிரப்புவதற்கு எதிர்ப்பார்ப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களாக சுகாதாரத்துறைக்கு புதியவர்களை நியமிப்பதில் பரியப் பிரச்சினைகள் காணப்பட்டதாகவும், நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் குறைபாடுகள் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தின் போது உரையாற்றுகையில் அமைச்சர் தெரிவித்தார்.இந்த மாத நடுப்பகுதிக்குள் 976 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.மார்ச் மாத நடுப்பகுதிக்குள் 238 பொதுச் சுகாதார பரிசோதகர்கள், 65 மருந்தாளர்கள், மற்றும் 41 கதிரியக்க வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
ஏப்ரல் மாதத்தில் 3,147 தாதியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.மே மாதத்திற்குள் 1,000 உதவியாளர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.