சுகாதார விதிமுறைகளை மீறிய 3,085 பேர் இதுவரை கைது

0
188

முகக்கவசம் அணியத்தவறிய மற்றும் கொரோனா சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத்தவறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதிக்குள் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்ரோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 3,085 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன எனத் தெரிவித்தார்.