

முத்தமிழ்குருமணிக்கு தமிழகத்தில் தருமபுர ஆதீன உயர்விருது வழங்கி கௌரவிப்பு!
முத்தமிழ்குருமணி சுன்னாகம் சிவஶ்ரீ சர்வேஸ்வர குருக்களுக்கு ஞானசம்பந்தர் இறைவனிடம் ஞானப்பால் அருந்தி முதல் திருமுறை பாடிய சீர்காழி திருத்தலத்தில் தருமபுரம் ஆதீனம் அவர்களால் ஆதீனத்தின் அதிஉயர் விருதாகிய “சிவாகம கலாநிதி “சிறப்பு விருதும், தங்கப்பதக்கம் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
ஐயா அவர்கள் பெற்ற விருது ஈழத்து சிவாச்சார்யார்கள் அனைவருக்கும் மிகவும் பெருமையும் சிறப்பையும் தந்துள்ளது. முத்தமிழ்குருமணிக்கு வாழ்த்துக்கள்.