சுயதொழில் பயிற்சி நெறிகளை
பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ்கள்

0
193

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள 22 கிராம சேவையாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 35 யுவதிகளுக்கு 3ஆம் கட்ட சுயதொழில் பயிற்சி நெறிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவைகள் பிரிவின் ஊடாக சிவனருள் பவுண்டேஷன் அமைப்பின் நிதி உதவியுடன் பயிற்சி நெறியானது கடந்த இரண்டு வாரகாலமாக இடம்பெற்று வந்ததுடன் பயிற்சி நெறியின் வளவாளராக பிரபல கேக் வடிவமைப்பாளர் என்.கலைச்செல்வி பயிற்சி நெறிகளை வழங்கி வைத்திருந்தார்.

சுயதொழில் பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் கேக் கண்காட்சிகளும் திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரி கே.பிரபாகரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் அமைப்பின் தலைவி கலாநிதி அனுசியா சேனாதிராசா திருக்கோவில் பிரதேச செயலகத்தின் நிருவாக அதிகாரி ரீ.மோகனராஜா மற்றும் ஏ.சசீந்திரன் அமைப்பின் பொருளாளர் இ.ஜனார்த்தனன் பிரதேச இளைஞர் கழகங்களின் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரீ.நிசாந்தன் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.