அடுத்த வருட ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்க எதிர்பார்த்திருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதற்கான வழிகாட்டி ஆலோசனைகள் தற்போது தயாரிக்கப்பட்டுவருகின்றன என அவர் தெரிவித்தார்.