சுவாமி விவேகானந்தரின் 125வது வருகை ஆண்டுக் கொண்டாட்டம்

0
152

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாட்டில் சுவாமி விவேகானந்தரின் 125வது வருகை ஆண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் காரைதீவு சுவாமி விபுலானந்தா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் இடம் பெற்றது.

சுவாமி விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க இலங்கை விஜயமானது 125வது ஓராண்டு தொடர் விழாவாக நேற்று கொண்டாடப்பட்டது.

இறைவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜள் அறிமுகவுரையை நிகழ்தியதுடன் தொடர்ந்து பஜனை வழிகாட்டுதல் தியானம் சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் நிகழ்வுகள் இடம் பெற்றன.

இந்து சமய கலாச்சார அலுவலகல் திணைக்களத்தின் அனுசரனையில் நடைபெற்ற நிக்ழ்விற்கு கொழும்பு ராமகிருஷ்ணா சாரதாமிஷன் தலைவி ப்ரவ்ராஜிக சுசாந்தப்ராண மாதாஜீ, கொழும்பு ராமகிருஷ்ணா சாரதாமிஷன் செயலாளர் ப்ரவ்ராஜிக ஆத்மதேவப்ராண மாதாஜீ உட்பட பொத்துவில் தொடக்கம் நாவிதன்வெளி வரையான அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜி வழிகாட்டலில் நிகழ்வுகள் அனைத்தும் இடம் பெற்றது.