
சித்திரைப் புத்தாண்டு அனைத்து ஜீவராசிகளுக்கும் மகிழ்ச்சியானதாக அமைய வேண்டும் எனவும் அனைவரும் இறை நம்பிக்கையோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் எனவும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ சித்திரைப் புத்தாண்டு அனைவருக்கும் புதிய சகாப்தத்தை படைக்க வேண்டும் என யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை தலைவர் ஈசான சிவ சக்திகிரீவன் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும்இ மக்கள் தமது ஆத்மீக செயற்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் கற்றுக்கொண்ட பாடங்களை எதிர்காலத்தில் சரியான விதத்தில் பயன்படுத்தக்கூடியதாக வாழ்க்கையை புதிதாக அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும்இ சோபகிருது வருடம் அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் எனவும் யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அரசாங்க அதிபர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். நாட்டு மக்கள் எதிர்நோக்குகின்ற பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து மக்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இதேவேளை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டில் எமது மக்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாகவும் சீராகவும் வாழவேண்டும் எனவும் ஆரோக்கியமான நல்ல சிந்தனைகளைக் கொண்டதாக எமது இனம் வளரவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
