ஜனாதிபதி அநுர குமாரவிற்கு ஜோபைடன் வாழ்த்து

0
66

அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அநுரகுமாரதிசநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் தாங்கள் பெருமைப்படக்கூடிய சுதந்திரமான நியாயமான அமைதியான தேர்தலின் மூலம்  உங்களை தங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர் என ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இந்தோ பசுபிக்கில் சமாதானம் பாதுகாப்பு மற்றும் செழிப்பினை ஏற்படுத்துவதற்கு உங்களுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளேன் என ஜோ பைடன் அநுரகுமாரதிசநாயக்க எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.