ஜனாதிபதி இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி- அத்துரலிய ரத்ன தேரர்

0
96

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் – சிங்கள இன முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில், மகா நாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.