ஜனாதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் நிலைப்பாடு அறிவிப்பு!

0
90

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அறிவித்துள்ளது.
அமைச்சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண தலைமையிலான குழு இவ்வாறு ஜனாதிபதியிடம் சுதந்திர கட்சியின் ஆதரவை தெரிவித்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில், தனக்கு ஆதரவளிக்குமாறு கோரி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு, சுதந்திர கட்சியின் அரசியல் குழு மற்றும் செயற்குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது
குறித்த தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்திருந்தது.
இதன் போது சில கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
அவை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது ஆதரவை அவருக்கு வழங்குவதாக சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.