பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பது குறித்து கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘அடுத்து ஜனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கும் முகமாக பரந்துபட்ட கூட்டணியொன்றை ஸ்தாபிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆலோசனையில்இ ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கஇ புதிய கூட்டணியின் ஏற்பாட்டாளர் நிமல் லன்சாஇ மற்றும் சுதந்திரக் கட்சியின் மைத்திரிபால சிறிசேன ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தத் தரப்பினருடன் இன்னமும் இறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை. எனினும் ஆரம்பகட்ட கலந்துரையாடல்கள் நேர்மறையாக உள்ளன. இதேவேளைஇ அடுத்துவரும் நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சிஇ பொதுஜன பெரமுனஇ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய தரப்பினருடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க மீண்டும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் எமது கூட்டணி அவரை பொது வேட்பாளராக ஏற்றுக்கொண்டு ஆதரிப்பதற்கு தயாராக உள்ளது. தற்போதைய நிலையில் நாம் ரணில் விக்கிரமசிங்கவின் முடிவினை எதிர்பார்த்துள்ளோம். ஆகவே அவர் ஜனாதிபதித் தேர்தலில் உத்தியோகபூர்வமாக போட்டியிடுவதாகவும் பொதுவேட்பாளராக களமிறங்குவதற்கு தயார் என்றும் அறிவிக்க வேண்டிய தீர்மானத்தினை எடுக்க வேண்டியவராக உள்ளார். அவரது முடிவுக்காக காத்திருக்கும் நாம்இ எமது பொது எதிரியான ஜே.வி.பியை தோற்கடிப்பதிலும் கரிசனைகளைக் கொண்டுள்ளோம்’ என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.