ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை தேவை: சபையில் அதாவுல்லாஹ்!

0
109

ஜனாஸா எரிப்புக்கு காரணமானவர்களுக்கு தண்டனை வழங்குவது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டுமென அதாவுல்லா எம்.பி இன்று பாராளுமன்ற சபையில் வலியுறுத்தினார்.
கொரோனா ஜனாஸா எரிப்புக்கு மன்னிப்பு கேட்டது நல்லது.
அதுவல்ல ஆனால் ஜனாஸா எரிக்கப்பட்டமை குறித்து நான் பல தடவை இந்த சபையில் கேள்வியெழுப்பியுள்ளேன்.
இந்த பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறி ஜனாஸா எரிக்க வர்த்தமானி ஒன்றை அப்போதைய அமைச்சர் பவித்ரா வெளியிட்டார்.
பாராளுமன்றத்தின் சிறப்புரிமை மீறப்பட்டது.
மன்னிப்பு கேட்பதை விட அதற்கான தண்டனையை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை இந்த பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்று அதாவுல்லாஹ் கூறினார்.