அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜூம்ஆ தினங்களில் நடத்துவதில்லை என்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் ஜூம்ஆ தினத்தில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது குறித்து தனது கண்டனத்தை வெளியிட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை, இனிவரும் காலங்களில் ஜூம்ஆ தினங்களில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜூம்ஆ தினத்தில் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களும் முஸ்லிம் திணைக்களத் தலைவர்களும் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதுடன் எதிர்காலங்களில் ஜூம்ஆ தினங்களில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம ஆகியோர் எதிர்வரும் காலங்களில் வெள்ளிக்கிழமை தினங்களில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடத்தப்படுவதை தவிர்த்துக் கொள்வதாகவும், இது தொடர்பில் ஏற்பட்ட அசெளகரியங்களுக்கு தாங்கள் மனம் வருந்துவதாகவும் கூறினர்