ஒரு கிலோ கிராம் தக்காளி மற்றும் கத்தரிக்காயின் விலை நேற்று (9) முதல் அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்களில் ஏனைய மரக்கறிகளின் விலைகள் கணிசமான அளவில் குறைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி 250 ரூபாவையும், 200 ரூபாவாக இருந்த கத்திரிக்காய் ஒரு கிலோகிராம் 350 ரூபாவையும் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டிகைக் காலங்களில் சந்தையில் அதிக கேள்வி நிலவுகின்றமையால் தக்காளி மற்றும் கத்தரிக்காய் விலை உயர்ந்துள்ளதாக விற்பனையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.