தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி நடக்கிறது- லலித் வீரதுங்க

0
327

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை எதிர்வரும் ஜூலை மாதமளவில் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். பத்து இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் பத்து மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

மேலும் ஒரு இலட்சம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளும் தெரிவு செய்யப்பட்ட, அபாயமிக்க தொற்றுப் பரவலைக் கொண்ட பிரதேச மக்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.