தனியார் பஸ்களுக்கு டிப்போக்களினூடாக எரிபொருள் விநியோகம்

0
155

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில், தனியார் பஸ்கள் நாளை முதல் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான முறைமை ஒன்றை உருவாக்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார் என்று இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (03) எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் (04) பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.