எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம், நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள், கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியில் இருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு முதல், தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என, தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், தபால்மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் கால அகாசம், நாளை நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.