இன்று யாழ் மாநகர சபை வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் சபை தானாகவே கலைந்ததாக கருதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு வாக்கெடுப்பு
நடத்தப்படுவதற்கு வாய்ப்புக்கள்
இல்லை.
இந்த வாக்கெடுப்பு நடக்காவிட்டாலும் கூட இன்னும் 19 நாட்களில் உள்ளூராட்சி சபையின் ஆயுட்காலம் தானாகவே முடி
வுக்கு வந்துவிடும்.
இந்த நிலையில் இன்றைய வரவு
செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போதும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின்
இரு அணிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ரெலோ,புளொட்
இணைந்து எதிர்த்தே வாக்களிக்கும்
என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால் இரண்டாவது வரவு
செலவுத்திட்டமும் தோல்வி அடையவே வாய்ப்புக்கள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது,