28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம், 3 பேர் பணி நீக்கம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்படுவதற்கு முன்னர் வினாத்தாளைக் கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகுதிநேர வகுப்பு ஆசிரியர்கள் சிலருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அநுராதபுரம் – ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் சேவையாற்றிய பரீட்சை மண்டப பொறுப்பதிகாரி உள்ளிட்ட 3 பேரே சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் அவர்களிடம் வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் அண்மையில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தது. 

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய குறித்த பேரும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles