28 C
Colombo
Sunday, September 8, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தர்மபுரத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும் 100 நாள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது,
கடந்த முதலாம் திகதி மன்னாரில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப்பொருளில்,
வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இன்றைய போராட்டத்தில் கிராம மட்ட அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள்,
சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles