தற்போதைய அரசாங்கத்தின் கீழ், ஊடகவியலாளர்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் இருண்ட யுகம் ஒன்று உருவாகி வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
நாடு படுகுழிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கம் தொடர்பில் விமர்சிப்பவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுதந்திர ஊடகவியலாளர் சமுதித சமரவிக்மகேவின் வீடு தாக்கப்பட்டமை, சமூக செயற்பாட்டாளரான செஹான் மாலகே கைதுசெய்யப்பட்டமை போன்ற இருண்ட யுகத்தையே நினைவுப்படுத்துகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.