நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடிகமலே பிரதேசத்தில், கத்தியால் குத்தி ஒருவர் நேற்று (5) படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று, தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 30 வயது நபரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரை, லிந்துலை வைத்தியசாலையில் அனுமதித்தப் போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
பிரேதப் பரிசோதனைக்காக லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.