கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய புனித தலயாத்திரை பயணம் இன்று காலை கோட்டைக்கல்லாறு அம்பாரை வில் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகியது.
தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தையிட்டு கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது புனித யாத்திரை பயணமாக இப் பயணம் அமைந்துள்ளது.
இன்று செல்லும் இவ் யாத்திரை குழுவினர் நாளை வியாழக்கிழமை காலை தாந்தாமலை முருகன் ஆலயத்தை சென்றடையவுள்ளனர்.
இம் முறை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்த அடியார்கள் இப் பாதயாத்திரை மில் இணைந்துள்ளமை இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது