தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி பொத்துவில்லில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவனியானது கிழக்கு மாகாணத்தில் இருந்து, வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்து, வடக்கு மாகாணத்தின், பல்வேறு பகுதிகளுக்கும், பவனி வருகின்றது.
அந்தவகையில் நேற்று எட்டாவது நாளில் மன்னார் மாவட்டத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த ஊர்தி பவனி, மன்னாரிலிருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவியை சென்றடைந்து மல்லாவி பாண்டியன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிற்கும் சென்று மக்களது அஞ்சலியை தொடர்ந்து எட்டாம்நாள் பயணம் மல்லாவியுடன் நிறைவு பெற்றது.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கில், இந்த ஊர்தி பவனி மக்கள் அஞ்சலிக்காக பயணிக்கிறது.