திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமற்போன மூன்று மீனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது காணாமல்போன மீனவர்களை தொடர்ந்து 8வது நாளாக தேடும் முயற்சியில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்கு படகில் சென்ற மூன்று மீனவர்கள் இன்னமும் கரை திரும்பாததால் அவர்களின் உறவினர்கள்சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், மீனவர்களைத் தேடி பாரிய படகொன்று ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக திருக்கடலூர் விபுலானந்தா கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் தங்கவேலாயுதம் கமல் தெரிவித்தார்.
இதேவேளை, காணாமற்போயுள்ள மீனவர்கள் தொடர்பில் இந்திய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.