தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பால், தமிழ் பொதுவேட்பாளரொருவர், ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுக்கட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், திருகோணமலையில் இன்று விசேட கலந்துரையாடலில்
ஈடுபட்டனர்.
திருகோணமலையில் உள்ள தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் வகையில், வடக்கு கிழக்கில், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.