திருகோணமலையில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்

0
219

திருகோணமலை பிரபல பெண்கள் பாடசாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நீதி கோரி இன்றைய தினம் திருகோணமலை வலயக் கல்வி பணியகத்துக்கு முன்பாக ஒன்று கூடிய குறித்த பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் குறித்த பாடசாலையில் கடமை ஏற்பதற்காக வருகை தந்த ஆசிரியர் ஒருவர் ‘ஹபாயா’ அணிந்து பாடசாலைக்கு வருகைதந்த நிலையில் அதிபருக்கும் குறித்த ஆசிரியருக்கும் ஏற்பட்ட கைகலப்பின் போது குறித்த பாடசாலை அதிபர் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்ட நிலையில் அப்பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு முடிவு எட்டப்படாத நிலையில் இரு வருடங்களுக்கு முன்பாக குறித்த பிரச்சினை நிமிர்த்தம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த ஆசிரியை மீண்டும் அப் பாடசாலைக்கு நியமிக்கப்பட்டது அரசியல் பின்புலத்திற்கு மத்தியில் நடந்திருக்கலாமென தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த ஆசிரியைக்கு இடமாற்றத்தினை பெற்றுத்தர வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அவர் அறியத்தருவதாக தெரிவித்த நிலையில் இதற்கான தீர்வு எட்டப்படும் வரை தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர்.