திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தால், பாடசாலை மாணவர்களுக்கான விதிவிட செயலமர்வு..

0
134

திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ், கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் கிழக்கிலங்கை மனித மேம்பாட்டு பொருளாதார நிறுவனத்தின் திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவன அனுசரணையுடன், திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு நடாத்தப்பட்டது.

திருகோணமலை சரஸ்வதி தமிழ் வித்தியாலய மாணவர்கள் செயலமர்வில் பங்கேற்றனர். திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்பணி.போல் றொபின்சன் அடிகளார் தலைமையில் செயலமர்வு நடைபெற்றது.

வளவாளர்களாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களான .ஷியாம் சுந்தரம், சுமித் பிரியங்கரா மற்றும் மருத்துவ மாது நித்தியகலா ஆகியோர் கலந்து கொண்டனர்.