திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் இலவச வைத்திய முகாம் இன்று நடைபெற்றது. திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைத்திய முகாம் கந்தளாய் அல்-தாரிக் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
இலவச வைத்திய முகாம் மூலம் 224 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்தனர். அல்-ஹித்மத்துல் உம்மாஹ் பவுண்டேஷனின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.பாயிஸ்தீன், திட்ட முகாமையாளர் எம். முகம்மது சாமில், திட்ட இணைப்பாளர் ஏ.எச்.எம். சித்தீக்,
திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் உறுப்பினர்களும் இணைந்து மருத்துவ முகாமை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.