திருகோணமலை குச்சவெளி புடவைக்கட்டு கிராமத்தில் ஏழைக்குடும்பத்தின் குடிசை வீடொன்று நேற்றைய தினம்
தீக்கிரையாகியுள்ளது. விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோதே வீட்டு கூரையில் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டு உடமைகள் முற்று முழுதாக தீயில் எரிந்துள்ளதுடன், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
குச்சவெளி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.