திருகோணமலை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில் தரம் 6க்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு

0
16

திருகோணமலை தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியில், தரம் 06க்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் வரவேற்பு நிகழ்வு இன்று காலை கல்லூரி முதல்வர் எஸ்.எம்.றஹீம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தரம் 06 இல் இணையும் புதிய மாணவர்கள் மேல் வகுப்பு மாணவர்களால் மாலை அணிவித்து மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டனர்.
மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.