திருகோணமலை, தோப்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து

0
42

திருகோணமலை, தோப்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள குமாரபுரம் பகுதியில் வீடொன்றின் சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து சம்பவித்துள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது.
வீட்டு உரிமையாளர் சமையல் எரிவாயுவினை பொருத்திக் கொண்டிருந்த போது சமையல் எரிவாயுவில் கசிவு ஏற்பட்டு தீ பரவியுள்ளது.
இதன் காரணமாக வீட்டிலிருந்த தளபாடங்கள், ஆடைகள் உள்ளிட்ட உபகரணங்கள் தீயினால் சேதமாகியுள்ளன.
தீ பரவியதை அடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தோப்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.