திருகோணமலை பெண்கள் கல்லூரியின் அதிபர் தாக்கபட்டமையினால் குழப்ப நிலை

0
278

திருகோணமலையிலுள்ள பிரபல பெண்கள் கல்லூரி ஒன்றில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் பிரச்சினை எழுந்த நிலையில் இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளது.

இன்று ஆசிரியர் ஒருவர் முகத்தை முழுவதுமாக மறைத்து ‘ஹபாயா’ அணிந்து பாடசாலைக்கு வந்த நிலையில் மாணவர்களும் பெற்றோரும் இதை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

இதை குறித்த ஆசிரியை காணொளிப் பதிவு செய்துள்ள தாகவும் அதைத் தடுக்க அதிபர் தலையீடு செய்ததையடுத்து அதிபரை குறித்த ஆசிரியை தாக்கியுள்ளார்.

இதையடுத்து கீழே விழுந்து மயக்கமடைந்த அதிபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிப்புத் தெரிவித்து குறித்த பாடசாலை மாணவர்களால் பாடசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.