திருகோணமலை முகாமடி கடற்பகுதியில், நீரில் மூழ்கி குடும்பஸ்தரொருவர் உயிரிழந்தார்

0
6

திருகோணமலை முகாமடி கடற்பகுதியில், கடல் அலையில் சிக்குண்டு, நீரில் அடித்துச் செல்லப்பட்ட மீனவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை, கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகை தள்ளி விடும் போது, எதிர்பாராத விதமாக, கடல் அலையில் மீனவர் சிக்குண்டார்.

சக மீனவர்களும், பாதுகாப்புத் தரப்பினரும் இணைந்து மீனவரை மீட்க முயற்சித்த போதும், அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகவே, மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவருக்கு வயது 53 என்றும், அவரது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.