29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருகோணமலை விவசாய பயிற்சி நிலையத்தில் மகளிர் தின நிகழ்வு

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேசிய மகளிர் தின நிகழ்வும் வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் மற்றும் மரக்கறி விதைகள் நன்கொடையாக வழங்கும் நிகழ்வும் திருகோணமலை மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இன்று இடம்பெற்றது.

இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் முகாமையாளர் என்.டி.ரகுராம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உப்புவெளி மற்றும் கப்பல்துறை விவசாய போதனாசிரியர் பிரிவைச் சேர்ந்த சுமார் 50 பெண் பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.

என் உலகம் என் வழியில் எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான குறித்த தேசிய மகளிர் தின நிகழ்வில் பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் மற்றும் மரக்கறி விதைகள் நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் வீட்டுத்தோட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் செயலமர்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

நிகழ்வில் பிரதம அதிதிகளாக இலங்கை வங்கியின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன், உட்பட வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய போதனாசிரியர் ஜனாப் ஜே. ஜே. ஜேசாட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles