அம்பாறை திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட காஞ்சிரங்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இணைந்த கரங்கள்
அமைப்பினால் 46 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் செல்லத்துரை கலைக்குமார் தலைமையில் இடம் பெற்றது.
பாடசாலை ஆசிரியர்கள், இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.