திருக்கோவில் பிரதேசத்தில் தெய்வீக கிராமம் நிகழ்ச்சி முன்னோடி கூட்டம்

0
173

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான தெய்வீக கிராம அன்மீக எழுச்சி நிகழ்வானது இம்முறை திருக்கோவில் பிரதேசத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தெய்வீக கிராம ஆன்மீக எழுச்சி நிகழ்வினை சிறப்பான நடாத்துவதற்கான ஒழுங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

அந்தவகையில் எதிர்வரும் 13ஆம் திகதி திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுதசுவாமி ஆலய வளாகத்தில் பிரதேச இந்து ஆலய நிருவாகிகள் இந்து அமைப்புக்களின் பங்களிப்புடன் ஆன்மீக எழுச்சி வீதி ஊர்வலம் அன்னதானம் கோமாதா பூஜை மற்றும் அன்மீக அதிதிகளின் சிறப்பு சொற்பொழிவுகள் என்பன இடம்பெற ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

கலந்துரையாடல் கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஜெயராஜ் பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் சர்மிளா பிரசாந் சிரேஸ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ஏ.சசிதரன் மற்றும் பிரதேச இந்த ஆலய தர்மகருத்தாக்கள் இந்துசமய பொது அமைப்புக்கள் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தனர்.