திருக்கோவில் பிரதேசத்தில்
உலர் உணவுப் பொதிகள் வழங்கல்

0
177

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தினக்கூலி தொழில் பாதிக்கப்பட்ட வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கபட்டன.தென்கிழக்கு ஒலுவில் பல்கலைக்கழக முகாமைததுவப் பீட பேராசிரியர் எஸ்.குணபாலின் ஏற்பாட்டில் பேராசியரியர் எஸ்.குணபாலனின் நண்பர்கள் வட்டத்தின் நிதிப் பங்களிப்புடன் அரிசி உற்பட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கி உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

இதன்போது பொருளாதார நெருக்கடியில் நாளாந்த உணவினை முறையாகப் பெற்றுக் கொள்ள முடியாத குழந்தைகள் உள்ள குடும்பங்களை தெரிவு செய்து முதல் கட்டமாக விநாயகபுரம் 01 மற்றும் உமிரி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200 குடும்பங்களுக்கு இவ் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா கிராம சேவை உத்தியோகத்தர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருக்கோவில் பிரதேசசபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.