அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இவ்வாண்டு வாணி விழாவின் இறுதி நாளான இன்று விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக நலம்புரிச் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் இன்று இடம்பெற்ற வாணி விழாவில் கலங்காரப் பந்தலில் விநாயகர் மற்றும் முப்பெரும் தேவியர்களுக்கான நிறைகுடங்கள் ஆவாகணம்; செய்யப்பட்டு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
விநாயகபுரம் சிவன் ஆலய பிரதம குரு கே.யுதர்சன் சர்மா பூஜைகள் நடாத்தப்பட்டதுடன் வாணிவிழா சிறப்பு பஜனைகள் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது