திருக்கோவில் பிரதேச செயலகத்தில்
அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

0
157

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான முதல் நாள் அரச கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாக வளாகத்தில் இடம் பெற்று இருந்தன.

இந் நிகழ்வானது திருக்கோவில் பிரதேச செயலாளர் கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலாக வளாகத்தில் இடம் பெற்று இருந்தன.

பிரதேச செயலாளர் அவர்களான் அரசின் புதிய ஆண்டுக்கான பொது மக்கள் சேவைகள் தொடர்பாக சிறப்புரை ஒன்றினை நிகழ்த்தி இருந்ததுடன் 2022ஆம் ஆண்டில் பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பணிகள் தொடர்பாகவும் அரச உத்தியோத்தர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து இருந்தார்.

இதேவேளை அரசினால் 2020 ஆம் ஆண்டுக்காக நடாத்தப்பட்டு இருந்த சிறந்த அரச சேவை உற்பத்தி திறன் போட்டியில் தேசிய ரீதியில் 03ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட விருது தொடர்பாக தனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்து இருந்தார்.

இந் நிகழ்ச்சி பிரதேச செயலாளர் கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந்த் கணக்காளர் நிருவாக உத்தியோகத்தர் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்