திருக்கோவில் மண்டானை பாடசாலைக்கு
விளையாட்டு சீருடை அன்பளிப்பு

0
296

அம்பாரை திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட திருக்கோவில் 04 மண்டானை பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான கழக சீருடை வழங்கப்பட்டது.
அதிபர் கே.டி.நிராஜன் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிக்கு தெரிவான 22 பாடசாலை மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இவ் பாடசாலையில் கல்வி பயிலும் 22 மாணவர்களும் கழக சீருடை இல்லாதிருந்த நிலையில் இலண்டனில் வாழும் புலம்பெயர் உறவான கே.துளசி செல்வனின் நிதிப் பங்களிப்பில் சமுக செயற்பாட்டளர் நிசாந்தனினால் சீருடைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருக்கோவில் விஸ்வதுளசி வித்தியாலய அதிபர் ஏ.கலாநேசன் திருக்கோவில் பிரதேச இளைஞர் கழங்களின் ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் ஆசியர்களான என்.மோகனராஜீ உடற்பயிற்சி ஆசிரியர் என்.லோகநாதன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.