தென்னிலங்கையில் திருடப்பட்ட முச்சக்கர வண்டிக்குப் போலி ஆவணங்களைத் தயாரித்து கிளிநொச்சியில் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் யாழ்.மாவட்ட விசேட குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி ஒன்றின் ஆவணங்கள் யாழ்.மாவட்ட போக்குவரத்துத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவைபோலியானவை என்று இரு சந்தேகநபர்களை கைது செய்து மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணையில் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்த பிரதானமான கடற்படை சிப்பாயை யாழ்மாவட்ட விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியபோது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது