திருமலையில், புதையல் தோண்டியவர்கள் கைது

0
86

திருகோணமலை மொரவௌ பொலிஸ் பிரிவில், புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில், நேற்றிரவு 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக
பொலிஸார் தெரிவித்தனர்.
மொரவௌ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்களில் நால்வர் மொரவௌ பொலிஸ் பிரிவுக்குட்பட்டவர்கள் என்றும் ஏனையவர்கள் இரத்தினபுரி, கேகாலை மற்றும் தெவனிபியவர பகுதிகளில் வசித்து வரும் 21 வயதுக்கும் 52 வயதுக்கும் உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தனித்தனியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கும் உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.