தீபாவளிக்கு மது வாங்கச் சென்றவர் உயிரிழப்பு!

0
187

தீபாவளி பண்டிகையையொட்டி மதுபானம் கொண்டு வருவதற்கு சென்ற இருவர், பத்தனை ஆற்றில் விழுந்து காணாமல்போயருந்த நிலையில், அதில் ஒருவரின் சடலம் டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அடிவாரத்தில் இருந்து நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரேக்லி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதான பழனியாண்டி மோகன்ராஜ் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதே தோட்டத்தைச் சேர்ந்த 51 வயதான பாலமாணிக்கம் பிரேம்குமார் என்பவரு; காணாமல் போயுள்ளார். காணாமல்போனவரை தேடும் பணி இடம்பெற்றுவருவதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.