தீர்வு கிடைக்காவிட்டால் நாளை வடக்கு முழுவதிலும் பணிப் புறக்கணிப்பு!

0
159

இலங்கை போக்குவரத்துசபையின் யாழ் சாலை சாரதி ஒருவர் தனியார் பேருந்து ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள யாழ் சாலை ஊழியர்கள் தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு இன்றைய தினம் தீர்வு கிடைக்காவிட்டால் நாளை வட பிராந்தியத்தில் உள்ள ஏழு சாலைகளையும் ஒன்றிணைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ் சாலை தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்